பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்றையதினம் (29.04.2024) பணிப் பகிஷ்கரிப்பினை முன்னெடுத்துள்ளனர்.
அந்தவகையில், இந்த பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தில் யாழ்ப்பாண (Jaffna) மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் இணைந்துள்ளனர்.
அதற்கமைய, யாழ்ப்பாண மாவட்டத்தில் பிரதேச செயலகங்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் அலுவலகங்களுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சமூகமளிக்கவில்லை.

மக்களின் இடர்பாடுகள்
இதனால், பிரதேச செயலகங்களில், மக்கள், சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் இடர்பாடுகளை எதிர்நோக்கியுள்ளனர்.




Source: https://tamilwin.com/article/development-officers-strike-in-jaffna-1714376737

