பொருளாதார நெருக்கடியின் மத்தியில் வாகன இறக்குமதிக்கு அதிகளவு நிதியை செலவிடுவது சிறந்தது அல்ல என அரசியல் பொருளாதார ஆய்வாளரும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளருமான அகிலன் கதிர்காமர்(Ahilan Kadirgamar) தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “வரலாற்றில் முதன்முறையாக இலங்கையின் பொருளாதாரம் தற்போது சுருங்கியிருக்கின்றது. இந்த நிலைமை மக்களையே பெருமளவில் பாதிக்கின்றது.
வாகன இறக்குமதி
பாதீட்டில் முன்வைக்கப்படும் விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளனவா என்பதை வருட இறுதியிலேயே தெரிந்து கொள்ள முடியும்.
பொருளாதார நெருக்கடியில் வாகனங்களை இறக்குமதி செய்ய வேண்டுமா என்ற கேள்வி தற்போது எழுகின்றது.” என அவர் தெரிவித்துள்ளார்.