எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தற்போது தொடர்ந்து பரபரப்பான காட்சிகள் வந்துகொண்டிருக்கிறது. கைதுக்கு பயந்து ஆதி குணசேகரன் மற்றும் அவரது தம்பிகள் ஊர் ஊராக தலைமறைவாக சுற்றிக்கொண்டிருக்கின்றனர்.
இருப்பினும் அவர்கள் அங்கிருந்தே ஜனனி தொடங்கி இருக்கும் தொழிலை கெடுக்க வேண்டும் என முயற்சிகளை செய்து வருகின்றனர்.
வீட்டில் இருக்கும் அறிவுக்கரசி தான் குணசேகரன் தரப்புக்கு தகவல்களை கொடுத்து வருகிறார்.

இன்றைய ப்ரோமோ
இந்நிலையில் இன்றைய ப்ரோமோவில் அறிவுக்கரசி ஒரு மோசமான பிளான் போடுகிறார். ஜனனி தரப்பில் இருந்து ஒருவரை கொலை செய்ய போவதாக சொல்கிறார்.
மறுபுறம் ஜனனி பேசும்போது ‘குணசேகரன் மற்றும் தம்பிகள் ஓப்பனாக வெளியில் வந்து எதுவும் செய்ய முடியாது’ என கூறுகிறார். என்ன நடக்க போகிறது? இன்றைய ப்ரோமோ இதோ.

