நாடளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பரப்பும் திட்டமிட்ட பொய்களை அம்பலப்படுத்தும் நடவடிக்கைகளை நாம் விரைந்து மேற்கொள்வோம் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நேரலை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அர்ச்சுனா எங்கள் மீது முன்வைக்கும் விமர்சனங்களுக்கு நாம் பதிலளிக்கும் அவசியம் இல்லை எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியுள்ளார்.
அர்ச்சுனா ஒரு விடயத்தை ஆரோக்கியமான முறையில் விவாதிக்கும் மனோநிலையில் இருக்கக்கூடிய ஒரு நபர் அல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அர்ச்சுனாவை முடிந்தளவுக்கு தவிர்ப்பதோடு அவர் கூறும் பொய்களை நாம் வேறு கோணத்தில் மக்களுக்கு தெளிவுபடுத்துவோம் எனவும் கஜேந்திரகுமார் குறிப்பிட்டுள்ளார்.
இவை தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நேரலை நிகழ்ச்சி,