இலங்கையில் ஏற்பட்ட கடுமையான காலநிலையை தொடர்ந்து, பல்வேறு சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
மக்களை அச்சுறுத்தும் வகையில் பல்வேறு தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் அதேவேளை, தற்போதைய அரசாங்கத்தையும் விமர்சிக்கும் வகையிலும் பல தகவல்கள் வெளியாகுகின்றன.
ஆனால், மீண்டும் பல அனர்த்தங்கள் ஏற்படும் எனவும் பொய்யான செய்திகள் பல பரப்பப்பட்டன. இது குறித்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கமும் வலியுறுத்தியிருந்தது.
இதற்கிடையில், பேரிடரில் இருந்து இலங்கையையும் மக்களையும் மீட்கும் வகையில் பல்வேறு திட்டங்களை அநுர அரசாங்கம் முன்னெடுக்கும் போதிலும் அரசாங்கம் குறித்த விமர்சனங்களும் குற்றச்சாட்டுக்களும் குறைந்தபாடில்லை.
எனவே, உண்மையில் நாட்டில் என்னதான் நடக்கின்றது, இடர்கள் குறித்த விளக்கங்கள் தான் என்ன என்பன உள்ளிட்ட பல வினாக்களை ஆராயும் வகையில் வருகின்றது கொழும்பு பல்கலைகழகத்தின் முன்னாள் புவியியல் துறை சிரேஸ்ட பேராசிரியர் கலாநிதி எஸ். என்டனி நோபட் உடனான நேருக்கு நேர் நிகழ்ச்சி,

