முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை ரத்துச் செய்யும் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானதல்ல என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
குறித்த சட்டமூலத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மீறல் வழக்குகளை தீர ஆராய்ந்த பின்னர் உச்சநீதிமன்றம் அதன் தீர்ப்பை அறிவித்துள்ளது.
உச்சநீதிமன்றின் அறிவிப்பு
உச்சநீதிமன்றத்தின் குறித்த தீர்மானம் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில் இன்றைய நாடாளுமன்ற அமர்வின் ஆரம்பத்தில் சபாநாயகர் அதனை அறிவித்துள்ளார்.

அதன் பிரகாரம் நாடாளுமன்றத்தின் சாதாரண பெரும்பான்மையைக்கொண்டு குறித்த சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

