நாற்பதுக்கு மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இலங்கை வருவதற்கான இலவச விசா வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்துள்ளார்.
வரவு – செலவுத்திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் இன்றையதினம்(15) கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், தற்போதைக்கு 39 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இலங்கை வருவதற்கான இலவச விசா வசதி வழங்கப்படுகின்றது.
திருத்தங்கள்
அந்தப் பட்டியலில் இன்னும் சில நாடுகளை உள்ளடக்கும் வகையில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளோம்.

குறித்த பட்டியல் இறுதி செய்யப்பட்டவுடன், வரவு செலவுத் திட்டம் நிறைவடைய முன்னர் நாடாளுமன்றத்தில் அதனை சமர்ப்பிக்கவுள்ளோம் என்றும் அமைச்சர் விஜித ஹேரத் தொடர்ந்தும் அறிவித்துள்ளார்.

