ஜனசெத பெரமுனவின் தலைவர் பத்தரமுல்லை சீலரத்ன தேரர் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.
திருகோணமலை (Trincomalee) மாவட்ட தேர்தல் செயலகத்தில் இன்றையதினம் (08.10.2024) வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.
திருகோணமலை மாவட்டத்திற்கான வேட்பாளர் சமீரவை மாவட்ட தலைவராகக் கொண்ட தனது கட்சியினது நியமனப் பத்திரம் இன்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக ஜனசெத பெரமுனவின் தலைவர் பத்தரமுல்லை சீலரத்ன தேரர் இதன்போது தெரிவித்துள்ளார்
இனவாதம்
இம்முறை 22 மாவட்டங்களில் தமது கட்சியானது போட்டியிடுவதாகவும் நாட்டில் இனவாதத்தினை தோற்றுவிப்பவர்களுக்கு எதிராக செயற்படத்தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பாக யாழ்.போதனா வைத்தியசாலையின் (jaffna teaching hospital) முன்னாள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் எஸ்.சிறிபவானந்தராஜா களமிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் .போதனா வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளராக கடமையாற்றிய வைத்தியர் சிறீ பவானந்தராஜா பின்னர் களுபோவில வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.