எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகளை நீக்குவதற்கான
சாத்தியக்கூறு இல்லை அரசாங்க தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் பெற்ற கடன்களை முழுமையாக திருப்பிச்
செலுத்தும் வரை வரிகள் நீக்கப்பட வாயப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிசக்தி அமைச்சர்
குறித்த விடயத்தை எரிசக்தி அமைச்சர் பொறியாளர் குமார ஜெயக்கொடி (Kumara Jayakody) தெரிவித்துள்ளார்.
அத்தகைய வரிச் சலுகை வழங்கப்பட்டால், அரசாங்கம், தமது கடன் திருப்பிச்
செலுத்தும் கடமைகளை நிறைவேற்ற முடியாது என்று அமைச்சர்
சுட்டிக்காட்டியுள்ளார்.