தேசிய மக்கள் சக்தி அரசுக்கு எதிராக எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில்
நடைபெறும் பேரணியில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காது என்பதை அந்த கட்சி
மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது ஐக்கிய மக்கள்
சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் நம்பிக்கை
“இந்தப் பேரணியில் பங்கேற்பதில்லை என எமது கட்சியின் முகாமைத்துவக் குழு
தீர்மானித்துவிட்டது.” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நுகேகொடை கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்கும் எனச் சில
எதிர்க்கட்சிகள் நம்பிக்கை வெளியிட்டு வரும் நிலையிலேயே இந்த அறிவிப்பு
வெளியாகியுள்ளது.

