2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைகள் திணைக்களத்தின் http://www.doenets.lk – www.results.exams.gov.lk அதிகாரபூர்வ இணையதளங்கள் மூலம் முடிவுகளை அறிந்து கொள்ள முடியும்
2,787 பரீட்சை நிலையங்களில் பரீட்சை
நாடாளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சை இம்முறை 2,787 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது.

இதன்படி இந்த வருடம் 23,1638 சிங்கள மொழி விண்ணப்பதாரர்கள் மற்றும் 76,313 தமிழ் மொழி விண்ணப்பதாரர்கள் உட்பட மொத்தம் 30,7959 விண்ணப்பதாரர்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர்.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் கூற்றுப்படி, இந்த ஆண்டு பிரெய்லி எழுத்துகளைப் பயன்படுத்திய 12 பரீட்சார்த்திகள் உட்பட மொத்தம் 901 சிறப்புத் தேவையுடைய மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றினர்.

