கொழும்பில் கிராண்ட்பாஸ் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த இருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இரு குழுக்களிடையே ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


