இசையமைப்பாளரும் நடிகருமான ஜீ.வி.பிரகாஷ் தொடர்ந்து பொதுவான விஷயங்கள் பற்றியும் சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர்.
சமீபத்தில் நெல்லையில் கௌரவ கொலை செய்யப்பட்ட கவின் குமார் பற்றி தற்போது ஜீ.வி.பிரகாஷ் பதிவிட்டு இருக்கிறார்.
“தீண்டாமை ஒரு பாவச்செயல்
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்
தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்”
“Rest in peace #kavinkumar” என ஜீ.வி.பிரகாஷ் பதிவிட்டு இருக்கிறார்.

அஜித்துக்கு நடந்தபோது எங்கே போனீங்க
இந்நிலையில் ஜீ.வி.பிரகாஷின் பதிவை பார்த்த நெட்டிசன்கள் அவர் தைரியமாக பேசியதற்காக பாராட்டி இருக்கின்றனர்.
ஆனால் பலரும் ‘அஜித் குமாரை போலீசார் அடித்து கொன்றபோது நீங்கள் எதுவுமே பேசாதது ஏன்’ என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Source: https://cineulagam.com/article/gv-prakash-on-kavin-kumar-netizens-ask-about-ajith-1753810957

