முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா மீது சுமத்தப்பட்டிருந்த அவமதிப்பு வழக்கிலிருந்து நீதிமன்றம் இன்று விடுவித்துள்ளது.
நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றம் சுமத்தி ஹிருணிகாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிறைவு செய்துள்ளது.
அத்துடன் குறித்த குற்றச்சாட்டுக்களில் இருந்து ஹிருணிகாவை விடுவிப்பதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நீதிமன்றம் உத்தரவு
கல்கிஸ்ஸ நீதிமன்றம் வழங்கிய உத்தரவு தொடர்பாக, ஊடகவியலாளர் சந்திப்பில் ஹிருணிகா தெரிவித்த கூற்றுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவ்வாறான கருத்துக்களை எதிர்வரும் காலங்களில் வெளியிடப் போவதில்லை என ஹிருணிகா பிரேமச்சந்திர தனது சட்டத்தரணி ஊடாக அறிவித்ததையடுத்து, நீதிமன்றம் அவரை விடுவித்துள்ளது.