முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழரசு கட்சியின் மத்திய குழுவில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களுடன் தொடர்ந்து
பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் (M.A. Sumanthiran) தெரிவித்துள்ளார். 

வவுனியாவில் இன்று (18.08.2024) அக்கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்ற மத்தியக்குழு கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

இதன்போது, தென்னிலங்கையின் பிரதான கட்சிகளோடு நடைபெறும் பேச்சுவார்த்தையின் விவரங்களை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்றைய கூட்டத்தில் தெளிவுபடுத்தியுள்ளார். 

தேர்தல் அறிக்கைகள்  

மேலும், தொடர்ந்து பேச்சுக்களை முன்னெடுக்கும்படியும், சம்பந்தப்பட்ட வேட்பாளர்களின்
கருத்து நிலைகளை அறிந்து, அவர்களின் தேர்தல் அறிக்கைகள் வெளியான பின்னர்
மத்திய குழு மீண்டும் கூடி அவற்றை ஆராய்ந்து, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ஒரு
முடிவை எடுக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழரசு கட்சியின் மத்திய குழுவில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம் | Ilankai Tamil Arasu Katchi Central Committee

இதனை தொடர்ந்து, பிரதான வேட்பாளர்களுடன் பேச்சு நடத்துவது தொடர்பிலும், தேர்தல்
விஞ்ஞாபனங்கள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட பின்னர் அவற்றையும் பரிசீலித்து
ஒரு தீர்மானத்தை எடுப்பது குறித்தும், இன்றைய மத்திய குழுவில் யோசனை ஒன்றை
நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் பிரேரிக்க அதனை மத்திய குழு ஏகமனதாக ஏற்றுக்கொண்டது.

இன்றைய கூட்டத்தின் ஆரம்பத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டு சற்று
நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கூட்டத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

மேலும், இந்த கூட்டத்தில் அவர் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவான கருத்து எதனையும்
முன்வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் பொதுவேட்பாளர் 

அதேவேளை, கட்சியின் அனுமதியின்றி ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட
வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் மீது
கட்சியினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதை கவனத்தில் கொண்டு செயற்படுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. 

தமிழரசு கட்சியின் மத்திய குழுவில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம் | Ilankai Tamil Arasu Katchi Central Committee

மேலும், தென்னிலங்கை பிரதான வேட்பாளர்களோடு தொடர்ந்து பேசுவதற்குக் கட்சி
தீர்மானித்திருப்பதையும் பிரதான கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளியான பின்னர் அவை யாவற்றையும்
பரிசீலித்து ஒரு முடிவை எடுக்கும் தீர்மானத்தில் கட்சி இருப்பது குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. 

அத்துடன், மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் பொறுப்புடனும் நிதானத்துடனும் செயற்படுமாறு கட்சியின்
பிரமுகர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் மத்திய குழு அறிவுறுத்தல் வழங்கும்
தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.