முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் முன்னெடுக்கப்பட்ட அதிரடி சோதனை: சட்டவிரோத களை நாசினிகள் மீட்பு

யாழ்பாணத்தில் (jaffna) சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட விவசாய இரசாயன களை
நாசினிகள் மற்றும் பூச்சி நாசினிகள் விற்பனை அதிகாித்துள்ள நிலையில், மாவட்டம்
முழுவதும் அதிரடி சோதனை ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

குறித்த சோதனை நடவடிக்கையானது விவசாய இராசயன கட்டுப்பாட்டு பிாிவினரால் இன்று (27) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு ஆபத்தான
இரசாயனங்கள் அடங்கிய களை நாசினிகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப் பெற்ற
தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

களஞ்சிய சாலை

இந்த சோதனை நடவடிக்கைகளின் போது ஆவரங்கால் பகுதியில் உள்ள வா்த்தக நிலையம்
ஒன்று சோதனைக்குட்படுத்தப்பட்டு அங்கிருந்து சுமாா் 4 மில்லியன் ரூபாய்
பெறுமதியான சட்டவிரோத களை நாசினிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

யாழில் முன்னெடுக்கப்பட்ட அதிரடி சோதனை: சட்டவிரோத களை நாசினிகள் மீட்பு | Illegal Herbicides Seized In Jaffna Raid

குறித்த வா்த்தக நிலையத்திற்கு சொந்தமான களஞ்சிய சாலையிலும் இந்த சோதனை
நடத்தப்பட்டுள்ளதுடன் குறிப்பிட்ட வா்த்தக நிலைய உாிமையாளா் மீது விவசாய
திணைக்களத்தினால் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

வா்த்தக நிலையம்

அத்தடன், சாவகச்சேரி பகுதியில் உள்ள வா்த்தக நிலையம் ஒன்றிலும் திடீா் சோதனை
நடத்தப்பட்டுள்ளதுடன், அங்கும் சட்டவிரோதமான களை நாசினி வியாபாரம் இடம்பெற்றமை
கண்டுபிடிக்கப்பட்டு வா்த்தக நிலைய உாிமையாளருக்கு எதிராக சாவகச்சோி நீதிவான்
நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

யாழில் முன்னெடுக்கப்பட்ட அதிரடி சோதனை: சட்டவிரோத களை நாசினிகள் மீட்பு | Illegal Herbicides Seized In Jaffna Raid

இந்த நிலையில், குறித்த வா்த்தக நிலைய உாிமையாளருக்கு இன்றைய (27) தினம் ஒன்றரை லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சாவகச்சோி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

களை நாசினிகள்

மேலும், “வெளிநாட்டிலிருந்து குறிப்பாக இந்தியாவிலிருந்து களை நாசினிகள் சட்டவிரோதமாக
இறக்குமதி செய்யப்பட்டு யாழில் விற்பனை செய்யப்படுகின்றது. இதனால் பொதுமக்களுக்கு மட்டுமல்லாமல் மண் வளமும் உடனடியாக பாதிக்கப்படும்
அபாயம் உள்ளது.

யாழில் முன்னெடுக்கப்பட்ட அதிரடி சோதனை: சட்டவிரோத களை நாசினிகள் மீட்பு | Illegal Herbicides Seized In Jaffna Raid

எனவே விவசாயிகள் இவ்வாறான சட்டவிரோத களை நாசினிகள்
தொடா்பாக அவதானமாக இருக்கவேண்டும். சட்டவிரோதமான களை நாசினி வியாபாரம் தொடா்பாக தகவல் அறிந்தால் விவசாய
திணைக்களத்திற்கு தகவல் வழங்கவேண்டும்” என மாவட்ட விவசாய திணைக்களத்தின்
உதவிப் பணிப்பாளா் அஞ்சனா ஸ்ரீரங்கன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

மேலும், சட்டவிரோத களை நாசினி வியாபாரத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை
தொடரும் எனவும், மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனைகள் நடத்தப்படும் எனவும்
அவா் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.