அந்நியச் செலாவணி கையிருப்புகளின் மதிப்பு, கடந்த ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் பெப்ரவரி மாதத்தின் இறுதியில் சற்று அதிகரித்துள்ளது.
அதன் பிரகாரம் கடந்த பெப்ரவரி மாத இறுதிக்குள் அந்நியச் செலாவணி கையிருப்பு 6,095 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
அறிக்கைகள்
இலங்கை மத்திய வங்கியின் சமீபத்திய தரவு அறிக்கைகள் இது தெரிய வந்துள்ளது.
கடந்த ஜனவரி இறுதியில் இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பானது 6,065 மில்லியன் டொலர்களாகப் பதிவாகியிருந்தது.
இந்நிலையில் பெப்ரவரியில் அதிகாரப்பூர்வ இருப்பு சொத்துக்களில் 0.5% சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
You may like this…