1987ஆம் ஆண்டு ஒக்டோபர் 21ஆம் திகதி ஆரம்பமான இந்தியப்படையினரின் கொலை வேட்டை 22ஆம் திகதி வரை யாழ்.போதனா வைத்தியசாலையில் தொடர்ந்தது.
இந்நிலையில் 22ஆம் திகதி நண்பகல் வேளையில் இராணுவ உயர் அதிகாரி ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்து அங்கு எஞ்சியிருந்த வைத்தியர்கள், வைத்தியசாலை ஊழியர்கள், நோயாளர்கள் மத்தியில் உரையாற்றினார்.
குறித்த இராணுவ அதிகாரி இந்திய இராணுவத்தினர் மீது எந்தவொரு தவறும் இல்லை எனவும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினர் அங்கு ஒழிந்திருந்து தாக்குதல் நடாத்தியதாலேயே தாம் தாக்குதல் மேற்கொண்டதாக குறிப்பிட்டார்.
மேலும் அங்கு இரத்த வெள்ளத்தில் வெள்ளைச் சீருடையுடன் கிடந்த வைத்தியர்களையும் வைத்தியசாலைப் பணியாளர்களையுமே குறித்த இராணுவ அதிகாரி தமது படையினர் சுட்டு வீழ்த்திய விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என வாதிட்டார்.
இவ்வாறாக ஈழத்திலே இந்தியப் படையினர் நிகழ்த்திய அட்டூழியங்கள் எண்ணற்றவையாகும். மேலும் இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது அவலங்களின் அத்தியாயங்கள் தொடர்…