இந்திய வான் படையில் உள்ள பிரான்சின் முக்கிய போர்விமானமான ரபலில் இன்று இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பறந்து புதிய பதிவை உருவாக்கியுள்ளார்.
பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய சிந்தூர் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட ஹரியானாவின் அம்பாலா விமானப்படை நிலையத்தில் இருந்து இந்த வரலாற்று சிறப்புமிக்க பயணத்தை முர்மு மேற்கொண்டார்.
முதல் முறையாக அமைந்த பயணம்
ரபலில் இன்று முர்மு பறந்த போது இந்திய விமானப்படைத் தளபதி மார்ஷல் ஏ.பி. சிங் மற்றும் பல மூத்த அதிகாரிகள் அம்பாலா விமானப்படைத்தளத்தில் இருந்தனர்.

Image Credit: SSBCrack News
முர்மு ஏற்கனவே சுகோய்-30 போர் விமானத்தில் பயணிந்தாலும் பிரெஞ்சு போர் விமானத்தில் பறந்தமை இது முதல் முறையாகும்.
பிரெஞ்சு விண்வெளி நிறுவனமான டசால்ட் ஏவியேஷன் தயாரித்த ரபல் போர் விமானம் 2020 இல் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டமை குறிப்பிடத் தக்கது.

