கிழக்கு தமிழர் கூட்டமைப்பில் இருக்கின்ற பிள்ளையான்,கருணா மற்றும் வியாழேந்திரன் போன்றவர்களே காலங்களில் கிழக்கு மாகாண மக்களின் உண்மையான தலைவர்களாக இருக்க போகிறார்கள் என்ற செய்தி கருணாவால் அண்மை காலங்களில் பேசப்படுகின்றது.
ஆனால் பிள்ளையான் சிறையில் இருக்கின்றார். வியாழேந்திரனை ஊடக பரப்புகளில் காண முடியவில்லை.
அவர் இப்போது இலங்கையில் இல்லை என்ற தகவலும் பேசப்படுகின்றது.
கிழக்கு தமிழர் கூட்டமைப்பு தான் கிழக்கு தமிழர்களை காப்பாற்ற போகின்றது என்ற செய்தியானது இன்று கிழக்கு மாகாணத்தின் பேசுபொருளாக மாறியுள்ளது.
இவை தொடர்பான மேலதிக தகவல்களையும் கருணாவுடன் கொழும்பு சென்ற நிலாவினி உட்பட நான்கு பெண்களுக்கு நடந்தது என்ன என்பது தொடர்பிலும் அலசி ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..,