சுமார் 30 பாதாள உலக குற்றவாளிகளின் சட்டவிரோத சொத்துக்கள் குறித்து விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாக காவல்துறையனிர் தெரிவித்துள்ளனர்.
கெஹல்பத்தர பத்மேவுக்குச் சொந்தமான இதுபோன்ற பல சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதன்படி, கம்பஹாவின் கெஹெல்பத்தர பகுதியில் ரூ.50 மில்லியன் மதிப்புள்ள 28 பேர்ச்சஸ் நிலங்கள் சமீபத்தில் பறிமுதல் செய்யப்பட்டன.
சொத்துக்கள் அடையாளம்
அத்துடன், லொக்கு பெட்டி என்ற குற்றவாளிக்கு சொந்தமான பல சட்டவிரோத சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அந்த சொத்து தொடர்பான உண்மைகள் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

