வடக்கு லெபனான் (Lebanon) நகரமான திரிபோலியில் (Tripoli) இஸ்ரேல் நடாத்திய தாக்குதலில் ஹமாஸ் அதிகாரி சயீத் அட்டால்லா கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா (Hezbollah) படையினர் வடக்கு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
ஹமாசின் இந்த தாக்குதல்களுக்கு பதிலடியாக இஸ்ரேல் (Israel) இராணுவம் தெற்கு லெபனான் எல்லை பகுதியில் தரைவழி தாக்குதலை தொடங்கியது.
ஈரான் இராணுவம்
இதனிடையே, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் (Tel Aviv-Yafo), ஜெருசலேம் (Jerusalem) நகரங்கள் மீது ஈரான் (Iran) இராணுவம் இரவு கண்டம் விட்டு கண்டம் பாயும் 180 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

இதில் சில ஏவுகணைகள் இஸ்ரேல் பகுதியில் விழுந்துள்ளதுடன், இந்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் வடக்கு லெபனான் நகரமான திரிபோலியில் உள்ள பலஸ்தீன அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஹமாஸ் தளபதி
இந்தத் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் ஆயுதப் பிரிவான அல்-கஸ்ஸாம் படைப்பிரிவின் தலைவரான சயீத் அட்டால்லா கொல்லப்பட்டுள்ளதுடன், அவரின் குடும்பத்தினர் 3 பேரும் உயிரிழந்துள்ளனர்.

மேலும் பலஸ்தீனத்தின் மேற்குகரையில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹமாஸ் தளபதி ஜாஹி யாசர் ஓபி உள்பட 8 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Source: https://ibctamil.com/article/israel-hamas-war-killed-hamas-leader-1728112589

