போர் நிறுத்த ஒப்பந்தப்படி இஸ்ரேல் (Israel) பிணைக்கைதியான ஆகம் பெர்ஜரை ஹமாஸ் (Hamas) அமைப்பு விடுவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது. இந்த ஒப்பந்தப்படி பிணைக்கைதிகள் பரிமாற்றம் நடந்து வருகிறது.
ஹமாஸ்
அந்த வகையில் 3வது கட்டமாக விடுவிக்கப் போகும் பிணைக்கைதிகள் குறித்த பட்டியலை ஹமாஸ் நேற்றைய தினம் (29.01.2025) வெளியிட்டது.

அதன்படி தற்போது, இஸ்ரேலின் இளம் இராணுவ வீராங்கனை ஆகம் பெர்ஜர் இன்று (30.01.2025) ஹமாஸ் அமைப்பினரால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

