இலங்கை தமிழரசுக் கட்சியுடனான கொள்கை ரீதியிலான ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.
வடக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினருக்கும் இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணம் தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றது.
இதன்போது, சமகால அரசியல் நிலமைகள் தொடர்பாகவும், தமது கட்சி நிலைப்பாடுகள் தொடர்பாகவும்
கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
கருத்து தெரிவித்தார்.
இலங்கை தமிழரசு கட்சியுடன் மேற்கொள்ளப்படவிருந்த கொள்கை ரீதியிலான ஒப்பந்தம் தொடர்பிலும் அவர் கருத்து தெரிவித்திருந்தார்.