முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் இருந்து மோடிக்கு பறந்த அவசர கடிதம்

யாழ் (Jaffna) மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் இந்தியப் (India) பிரதமரிடம் பகிரங்க கோரிக்கையொன்றை விடுத்துள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு விஜயம்
செய்யவுள்ள நிலையில் இக்கோரிக்கையை கடற்றொழிலாளர்கள் விடுத்துள்ளனர்.

இதனடிப்படையில், பிரதமர் மோடிக்கு தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றையும் யாழிலுள்ள
இந்திய துணைத் தூதுவராலயத்தில் நேற்று (02) கையளித்துள்ளனர்.

அத்துமீறிய தொழில் 

இதன்பின்னர் யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின்
சம்மேளனத்தின் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியதீசன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

யாழில் இருந்து மோடிக்கு பறந்த அவசர கடிதம் | Jaffna Fishermen S Urgent Appeal To Indian Pm

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய தொழில் நடவடிக்கையினால் இலங்கையின் வடபகுதி
கடற்றொழிலாளர்கள் பல்வேறு பிரச்சனைகளையும் பாதிப்புக்களையும் எதிர்நோக்கி வருகின்றனர்.

இதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென மொடர்ச்சிசியாக நாங்கள் கோரிக்கை
விடுத்து வந்திருக்கிறோம்.

இந்திய அரசுகள் 

ஆனால், இலங்கை இந்திய அரசுகள் இந்தப் பிரச்சனைக்கான
தீர்வை ஏற்படுத்திக் கொடுக்காத நிலைமையே காணப்படுகிறது.

யாழில் இருந்து மோடிக்கு பறந்த அவசர கடிதம் | Jaffna Fishermen S Urgent Appeal To Indian Pm

எனவே, இலங்கைக்கு வருகின்ற இந்தியப் பிரதமர் இலங்கை இந்திய கடற்றொழிலாளர்
விவகாரத்திற்கு சரியான தீர்வொன்றை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கிறோம்.

அதாவது எமது கடற்பரப்பிற்குள் எக்காரணம் கொண்டும் இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறி
வரக்கூடாது.

எதிராக நடவடிக்கை

அதனையும் மீறி வந்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட
வேண்டும்.

யாழில் இருந்து மோடிக்கு பறந்த அவசர கடிதம் | Jaffna Fishermen S Urgent Appeal To Indian Pm

அத்தோடு இந்திய கடற்றொழிலாளர்களினால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழத்துள்ள எமது
கடற்றொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமெனவும் கோரியுள்ளோம்.

மேலும், தொடர்ந்தும் இந்திய கடற்றொழிலாளர்களினால் அத்துமீறிய தொழில் நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட்டால் அதற்கு எதிராக தொடர்ந்தும் குரல் எழுப்பி முன்னரைப்
போன்று போராட்டங்களை முன்னெடுப்போம்” என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/embed/b8wFQl85fMo

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.