ஜேசன் சஞ்சய் படம்
தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். கடந்த 2023ம் ஆண்டு இதற்கான அறிவிப்பு வெளிவந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் ஹீரோ சந்தீப் கிஷன் என அறிவித்தனர்.
நான்கு நாட்களில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
ஹீரோ குறித்து அறிவிப்பு வந்த நிலையில், படப்பிடிப்பும் விறுவிறுப்பாக சென்னையில் துவங்கியுள்ளது. ஆனால், மூன்று நாட்கள் மட்டுமே இந்த படப்பிடிப்பு நடந்துள்ளது. இந்த தகவல் வெளிவந்த நிலையிலும், சஞ்சய் இயக்கத்தில் உருவாகும் படம் ட்ராப் ஆகிவிட்டது என பேச துவங்கிவிட்டனர்.
உண்மை இதுதான்
ஆனால், உண்மையில் அப்படி எதுவும் நடக்கவில்லை. முதற்கட்ட படப்பிடிப்பு மூன்று நாட்கள் சென்னையில் நடந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு இலங்கையில் விரைவில் துவங்கவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம்.
லைகா நிறுவனத்திடம் இருந்து First Copy அடிப்படையில் ரூ. 25 கோடி இப்படத்திற்கான பட்ஜெட்டை சஞ்சய் வாங்கிவிட்டாராம். இதனால் படப்பிடிப்பிற்கு எந்த ஒரு தடையும் இருக்காது என்றும், படம் கைவிடப்பட்டது என வெளிவந்த தகவல் உண்மையில்லை என்றும் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.