கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜே.வி.பி கட்சியின் தேசிய பட்டியலில் இணைந்துக்கொள்ளுமாறு அக்கட்சியின் பிரதிநிதிகள் தன்னை அழைத்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் பொதுவேட்பாளரை ஆதரித்து நேற்று (19.09.2024) இடம்பெற்ற பிரசார கூட்டத்திலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
“கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நான் தோல்வியுற்ற போதிலும், தேசிய பட்டியலில் இணைந்துக்கொள்ளுமாறு ஜே.வி.பியினர் என்னை அழைத்தனர்.
எனினும், நான் அதனை மறுத்து விட்டேன்.
நாங்கள் எப்போதும் இனம் சார்ந்து தான் இருப்போம். நாம் உழைப்பதற்க்காக அரசியலுக்கு வரவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,