சன் டிவியின் கயல் சீரியலில் கயல் குடும்பத்தில் தொடர்ந்து சிக்கல் மேல் சிக்கலாக வந்துகொண்டிருக்கிறது. தேவி கணவர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட தம்பி அன்பு செய்த செயல் தான் காரணம் என தொடர்ந்து பேச பேச வீட்டில் பல சிக்கல்கள் வருகிறது.
தான் வீட்டை விட்டு வெளியேறி தனிக்குடித்தனம் போவதாக அன்பு கூறி வீட்டில் சண்டை போடுகிறார்.

கயல் செய்யும் விஷயம்
கயலுக்காக அம்மா தன்னை ஏளனமாக பேசுவதாக அன்பு கூறுகிறார். வீட்டை விட்டு போக வேண்டாம் உள்ளே போ என கயல் கூற, யார் சொன்னாலும் கேட்க முடியாது என அன்பு அவரை மதிக்காமல் பேசுகிறார்.
மேலும் பிரச்சனை கைமீறி போக அன்பு பையை தூக்கிக்கொண்டு வெளியேறுகிறார். அப்போது கயல் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு விஷயம் செய்கிறார். ப்ரோமோவை பாருங்க.

