Courtesy: தேவந்தன்
அண்மைக்காலமாக கிளிநொச்சி(Kilinochchi) மாங்குளம் முறிகண்டி வட்டக்கச்சி என பல்வேறு
பகுதிகளில் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள்
கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக
நபரிடம் இருந்து இதுவரையில் 06 மோட்டார் சைக்கிளும் 15 பவுனுக்கு அதிகமான தங்க
நகைகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
சந்தேக நபர்கள் இருவரும் கிளிநொச்சி
நீதிமன்றத்தில் முற்படுத்திய பின்னர் இன்றைய தினம்(16)மேலதிக
விசாரணைகளுக்காக மீண்டும் கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.