கொத்மலை – இறம்பொடை பேருந்து விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு வழங்கும் ஒரு திட்டம் கொண்டுவரப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களை நேற்றையதினம்(14.05.2025) சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணி உட்பட பல தனிநபர்கள் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ முன்வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குழந்தைகளின் எதிர்காலம்
குறிப்பாக விபத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு உதவிகள் செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

