Kpy பாலா
சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் பாலா. கலக்கப்போது யாரு நிகழ்ச்சி அவருக்கு நல்ல புகழ் கொடுக்க Kpy பாலா என ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.
அந்நிகழ்ச்சியில் இருந்து குக் வித் கோமாளி பக்கம் வந்தவர் செம ரைமிங் காமெடி செய்து பெரிய அளவில் புகழ் பெற்றார்.
அந்நிகழ்ச்சியில் இருந்து அப்படியே நிறைய தனியார் நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வந்தவர் மக்களுக்கு சேவை செய்தும் வருகின்றார். அதவது, அவர் தான் சம்பாதிக்கும் பணத்தை வைத்து கஷ்டத்தில் இருக்கும் பலருக்கு உதவி செய்து வருகிறார்.


நடிகை சாய் பல்லவிக்கு நன்றி சொன்ன ரன்பீர் கபூர்.. இது தான் காரணமா?
என்ன செய்துள்ளார்?
இந்நிலையில், காமெடி நாயகனாக வலம் வந்த பாலா தற்போது காந்தி கண்ணாடி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகாகியிருக்கிறார்.

இந்த படத்திற்காக அவர் வாங்கிய சம்பளத்தை கொண்டு இரண்டு குடும்பங்களுக்கு வீடு கட்டிக்கொடுத்திருக்கிறார். இந்த மனதை மக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

