மன்னார் ஒரு தரிசு நிலம் எனவும் அங்கு காற்றாலை மின்திட்டத்தை அமைப்பதால் பறவைகளுக்கும் இயற்கை சமநிலைக்கும் பாதிப்பு ஏற்படாது எனவும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்துள்ள கருத்துக்கு சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
காற்றாலை மின்திட்டத்தை அமைப்பதால் பறவைகளுக்கு ஆபத்து ஏற்படும் என்பது ஆதாரமற்ற விடயம் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
அத்துடன், மன்னாரை சிலர் சொர்க்கம் என கூறினாலும் பூநகரி வடக்கு முதல் காணப்படும் பகுதி ஒரு தரிசு நிலம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முட்டாள்தனமான பதில்
மேலும், அங்கு பறவைகள் எதனையும் தான் பார்க்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கு பதிலடி அளிக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் வெலிகம மாநகர முதல்வர் ரெஹான் ஜயவிக்ரம இந்த ஆண்டு அரசியல்வாதிகள் கூறிய முட்டாள்தனமான பதில்களில் இதுவே தலைசிறந்தது என தெரிவித்துள்ளார்.