முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

டக்ளஸ் – அங்கஜனின் வாக்குகளே அநுர தரப்பிற்கு கிடைத்தது! அடைக்கலநாதன் சுட்டிக்காட்டு!

யாழ்ப்பாணத்தில் டக்ளஸ் மற்றும் அங்கஜன் ஆகியோரது வாக்குகளே
தேசிய மக்கள் சக்திக்கு சென்றுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம்
அடைக்கலநாதன்(Selvam Adaikalanathan) தெரிவித்துள்ளார்.

வவுனியாவிலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று(23.11.2024) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே
அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பொதுத் தேர்தல் முடிவுகள் 

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது தேசியமக்கள் சக்தி மீது மக்கள் அதிக
நம்பிக்கை வைத்திருப்பதாக தெரிகிறது.

அந்த அலை வடக்கிலும் கிழக்கிலும் பாதிப்பை
ஏற்ப்படுத்தியிருக்கும் நிலைமை உள்ளது. 

டக்ளஸ் - அங்கஜனின் வாக்குகளே அநுர தரப்பிற்கு கிடைத்தது! அடைக்கலநாதன் சுட்டிக்காட்டு! | Let S Get Together Adaikalanathan Anura Gvmt

மக்களின் எதிர்பார்பை இந்த அரசாங்கம்
தீர்க்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு காலம் தான் பதில்
சொல்ல வேண்டும்.

ஜனாதிபதியின் உரையில் தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக பேசாமை
வருத்தமளிக்கிறது.

விவசாயிகள், கடற்தொழிலாளிகள் மற்றும் ஏழைமக்களின் பொருளாதாரம் தொடர்பாக அவரால்
சொல்லப்பட்ட கருத்தை வரவேற்கின்றேன்.

புதிய அரசாங்கம்

அனைவரும் இலங்கையர்கள் என்ற அடிப்படையிலேயே அவரது செயற்பாடு இருக்கிறது. எனவே இனப்பிரச்சினை விடயத்தில் அரசாங்கம் என்ன நிலைப்பாட்டில் உள்ளது என்பதை தெளிவாக கூறவேண்டும்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் போது 13ஆவது திருத்தமும் இல்லாமல்
செய்யப்படும் என்ற நிலை வரலாம் என கூறப்படுகின்றது.

டக்ளஸ் - அங்கஜனின் வாக்குகளே அநுர தரப்பிற்கு கிடைத்தது! அடைக்கலநாதன் சுட்டிக்காட்டு! | Let S Get Together Adaikalanathan Anura Gvmt

எனவே நல்ல விடயங்களை ஆதரிப்போம் மக்களுக்கு அநீதி இழைக்கப்படும் நிலை தொடர்ந்தால் அதனை நாம்
கடுமையாக எதிர்ப்போம்.

நாங்கள் ஒற்றுமையாக இருந்திருந்தால் இந்த ஆசனங்கள் தேசியமக்கள் சக்திக்கு
சென்றிருக்காது. தமிழ்க்கட்சிகளுக்கு விழுந்த வாக்குகளை பார்த்தால் அது புலப்படும்.

தமிழ்க்கட்சிகள்

நாடாளுமன்றத்தில் தனித்தனியாக நாங்கள் செயற்பட முடியாது என்பது எனது
கருத்து. 

டக்ளஸ் - அங்கஜனின் வாக்குகளே அநுர தரப்பிற்கு கிடைத்தது! அடைக்கலநாதன் சுட்டிக்காட்டு! | Let S Get Together Adaikalanathan Anura Gvmt

பொதுவான விடயத்தில் ஏனைய தமிழ்க்கட்சிகளுடன் இணைந்து ஒற்றுமையாக
செயற்ப்படவேண்டும். அதன் மூலமே பல விடயங்களை நாம் சாதிக்கமுடியும்.

நாங்கள் ஒன்றிணைந்தால் மக்கள் எங்களோடு நிற்பார்கள் என்பதை தேர்தல்மூலம்
சொல்லியிருக்கிறார்கள்.

எனவே இனிவரும் காலங்களிலும் நாங்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.” என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.