முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது முன்னர் மேற்கொள்ள வேண்டிய திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சை என தெரிவிக்கபட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி
அவர் பல மாதங்களாக கல்லீரல் தொடர்பான நோய்க்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அதன்படி, அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் தற்போது கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவ மேற்பார்வையின் கீழ் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று முன்தினம் (08) அவரது நலம் விசாரிக்க பல முன்னாள் ஜனாதிபதிகளும் தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.