மித்தெனிய முக்கொலையுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குட்டிகல – படலங்கல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
39 வயதான இந்த சந்தேக நபர் குட்டிகல – படலங்கல பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
11 சந்தேகநபர்கள்
இந்த கொலையுடன் மொத்தம் 11 சந்தேகநபர்கள் தொடர்புடையவர்களாக கருதப்படுகின்றனர்.
கடந்த பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி கஜா என அழைக்கப்படும் அருண விதானகமகே மற்றும் அவரது மகன் மற்றும் மகள் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது சுட்டுக்கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.