சேவை ஏற்றுமதிகள் மீதான 15வீத வரி விதிப்பானது, வணிகங்களை ஊக்கப்படுத்தாமல்,
துறையின் வளர்ச்சியைப் பாதிக்கும் என்று தொழில்துறை அமைச்சர் சுனில்
ஹந்துன்னெத்தி எச்சரித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் போது பேசிய ஹந்துன்னெத்தி, அரசாங்கத்தின்
ஒருங்கிணைந்த அணுகுமுறையை ஒப்புக்கொண்டுள்ளார்.
வருவாயை ஈட்டல்
ஆனால் அனைத்து கவலைகளையும் உடனடியாக நிவர்த்தி செய்ய முடியாது என்று
குறிப்பிட்டார்.
தாம், அந்த வரியை எதிர்த்தாலும், நிதி அமைச்சக அதிகாரிகள் வரி வருவாயை
ஈட்டுவதற்கு இது ஒரு தேவையான நடவடிக்கையாகக் கருதுகின்றனர் என்று அவர்
கூறினார்.
டிஜிட்டல் தொழில் முனைவோரின் பங்களிப்பைக் குறிப்பிட்டு, ஹந்துன்னெத்தி இந்த
விவகாரம் குறித்து மேலும் விவாதங்களின் அவசியத்தை வலியுறுத்தினார்.