செம்மணி போராட்டத்திற்கு வந்த அமைச்சர் சந்திரசேகர் மற்றும் தம்மை துரத்தியது சில கட்சியினரும் ஊடகங்களுமே என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இவ்வாறான நடவடிக்கைகள் தமிழ் மக்களுக்கு பாரிய பாதிப்பையே ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மக்களை வைத்து பிழைப்பு நடத்தும் சில கூட்டங்களே இவ்வாறான செயல்பாடுகளில் ஈடுபடுவதாகவும் அவர் ரஜீவன் தெரிவித்துள்ளார்.
செம்மணி போராட்ட திடலுக்கு சென்ற அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி போத்தல்களினால் எறியப்பட்டு விரட்டியடிக்க பட்டிருந்தனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணோளியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்…
https://www.youtube.com/embed/BhG_pMD783g

