தமிழ் தேசிய வாதம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நெருக்கமாக தொடர்புடைய
தமிழ் மொழி பிரசாரப் பாடல்களை வடக்கு மற்றும் கிழக்கில் வெளியிட்டுள்ளதை தேசிய
மக்கள் சக்தி மறுத்துள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள சில இளைஞர்களால் உருவாக்கப்பட்ட சில காணொளிகள்,
தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனின்
பேஸ்புக்கில் டேக் செய்யப்பட்டுள்ளதாக, தேசிய மக்கள் சக்தியின் பொதுச்
செயலாளர் நிஹால் அபேசிங்க கூறியுள்ளார்.
தொடர்பில்லை
இந்த நிலையில், தேசிய மக்கள் சக்திக்கோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்
இளங்குமரனுக்கு அந்த காணொளிகளுடன் எந்த தொடர்பும் இல்லை என்று அவர்
தெரிவித்துள்ளார்.

அத்தகைய காணொளிகள் டேக் செய்யப்படுவதில், தேசிய மக்கள் சக்திக்கு எந்த
கட்டுப்பாடும் இல்லை.
சில இளைஞர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் பேஸ்புக்கில் காணொளிகளை
உருவாக்கி டேக் செய்துள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

