பாடசாலைகளில் மாணவர்களிடம் பணம் வசூலிப்பது தொடர்பில் கல்வி அமைச்சுக்கு தகவல் தெரிவிக்கப்படும் வேளை, அது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் ஆலோசனைக் குழுவின் முதல் அமர்வில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கல்விக் கொள்கை
கல்விக் கொள்கைகளை முறையாக செயல்படுத்தாததாலும், அரசியல் தலையீடுகளாலும் பல நெருக்கடிகள் எழுந்துள்ளதாகவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

2026 ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட உள்ள கல்வி சீர்திருத்தத்தில் பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்துதல், மனித வளங்களை மேம்படுத்துதல், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் மதிப்பீடு மற்றும் மதிப்பீட்டை நடத்துதல் ஆகியவை அடங்கும் என்று பிரதமர் விளக்கியுள்ளார்.
இதேவேளை, பாடசாலைகளில் இடம்பெறும் பல்வேறு கொண்டாட்டங்களுக்காக பெற்றோர்களிடமிருந்து பணம் அறவிடக்கூடாது என நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தரவினால் கடந்த ஆண்டு சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Source: https://ibctamil.com/article/notify-if-money-is-spent-on-schools-1741405402

