தேசிய மக்கள் சக்தியின் சார்பில் வவுனியாவில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு
தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது இன்று (27) வவுனியா குடியிருப்பில் அமைந்துள்ள வன்னிப் பிளாசா விடுதியில் இடம்பெற்றுள்ளது.
சத்தியப்பிரமாணம்
இதன்போது வவுனியாவில் உள்ள ஐந்து உள்ளூராட்சி மன்றங்களிலும் தேசிய மக்கள்
சக்தியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் மற்றும் விகிதாசார உறுப்பினர்கள்
கலந்து கொண்டு தமது சத்திய பிரமாணத்தை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த நிகழ்வு கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க மற்றும் நாடாளுமன்ற
உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரனின் முன்னிலையில் இடம்பெற்றிருந்தது.
கடந்த
உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு வவுனியாவில் உள்ள
சபைகளில் 26 ஆசனங்கள் கிடைக்கப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


