இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் 18.2 பில்லியன் ரூபாய்களை ஈட்டியுள்ளது என்றும், திறைசேரிக்கு 500 மில்லியன் ரூபாய்களை வழங்கியுள்ளது என்றும் தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
“முதல் ஆறு மாதங்களில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் ரூ. 18.2 பில்லியன் இலாபம் ஈட்டியுள்ளது. அதாவது குடிமக்கள் ரூ. 18.2 பில்லியன் அதிகமாக செலுத்தியுள்ளனர். ஆனால் அதை மக்களுக்கு ஈடாக வழங்க முடியாது. மக்களுக்கு ஈடாக வழங்கக்கூடிய எண்ணெய் சந்தையை அது கொண்டிருந்தால், பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அதனை வழங்கும்.
வேறு வழியில் மக்களுக்கு வழங்கப்படும் இலாபம்
எண்ணெய் சந்தையில் வேறு போட்டியாளர்கள் உள்ளனர். போட்டியாளர்கள் இருந்தால், இலாபத்தை இலாபமாக வசூலிக்க வேண்டும். ஆனால் எண்ணெய் கூட்டுத்தாபனம் ஈட்டிய லாபத்தை எண்ணெய் மூலம் மக்களுக்கு வழங்க முடியாது என்பதால், அது வேறு வழியில் மக்களுக்கு வழங்கப்படுகிறது.

அது இன்று திறைசேரிக்கு வழங்கப்பட்ட ரூ. 500 கோடி. அதை வேறு வழியில் குடிமக்களுக்கு வழங்குவோம். லிட்ரோ நிறுவனமும் லாபத்தில் ஒரு பங்கை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.”

