முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பட்டலந்த அறிக்கையின் உள்ளக டீல்! கடும் விமர்சனத்தை முன்வைத்த சஜித் தரப்பு

பட்டலந்த சித்திரவதை புரிந்தவருக்கு தண்டனை வழங்கப்படுமா என்பதில் சந்தேகம் நிலவுவதாகவும், ஏனெனில் சிறந்த டீல் ஒன்று இதற்குள் உள்ளது எனவும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

பட்டலந்த தொடர்பில் நாடாளுமன்றில் மேலும் கருத்து தெரிவித்த மரிக்கார்,

“1998 இல் ஆணைக்குழு அறிக்கை வந்தது. அதன்பின்னர் 2004இல் சந்திரிகாவுடன் இணைந்து அரசாங்கம் அமைத்தனர்.

அத்துடன் மகிந்த ராஜபக்சவுடன் 2005இல் உடன்படிக்கை செய்தனர். அப்போதும் அதற்கான கோரிக்கை முன்வைக்கப்படவில்லை.

2010 ஜனாதிபதித் தேர்தலில் பொன்சேகாவுக்கு ஆதரவளித்த போதும், 2015இல் நல்லாட்சி அரசாங்கத்தின் போது திருட்டுத்தனமாகவேனும் அதுபற்றி கூறவில்லை.

இருட்டு அறையில் இருந்த அறிக்கை

25 வருடங்களாக இருட்டு அறையில் இருந்த அறிக்கையை வெளியில் எடுப்பதற்கு அல்ஜசீராவில் தகவல் வெளியான பின்னரே இப்போது அறிக்கையை சபையில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பட்டலந்த அறிக்கையின் உள்ளக டீல்! கடும் விமர்சனத்தை முன்வைத்த சஜித் தரப்பு | Patalanta Report Best Deal

இனியாவது 1988/89இல் நடந்த சகல கொலைகள் தொடர்பிலும் மீள முழுமையான விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவாகி எதிர்வரும் வெள்ளிக்கிழமையுடன் 6 மாதங்கள் ஆகின்றன.

தேர்தல் மேடைகளிலும் அதற்கு முன்னர் உணவு, கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றுக்கன வரிகளை முதலாவது வரவு செலவுத் திட்டத்திலேயே இல்லாமல் செய்வோம் என்று கூறியிருந்தார்.

ஆனால் இதனை இன்னும் செய்யவில்லை.

அவருக்கு வாக்களித்த பெண்கள் யூடியுப், டிக்டொக் பார்த்து 76 வருடங்களாக ஊழல் மோசடிகளாலேயே வரிகள் அதிகரித்துள்ளன.

அந்த ஊழல்கள் குறைந்தால் வரி குறையும், வரி குறைந்தால் பொருட்களின் விலை குறையும் என்று கூறிக்கொண்டு தமது கணவர் கூறுவதையும் கண்டுகொள்ளாது அநுரகுமாரவுக்கு வாக்களித்தனர்.

பட்டலந்த தேடல் 

ஆனால் 6 மாதங்கள் ஆகியும் இன்னும்பொருட்களின் விலைகளும் குறையவில்லை. வருமானமும் அதிகரிக்கவில்லை. இப்போது அந்த பெண்களுக்கு தமது கணவர்களுக்கு முகம்கொடுக்க முடியுமோ தெரியவில்லை.

பட்டலந்த அறிக்கையின் உள்ளக டீல்! கடும் விமர்சனத்தை முன்வைத்த சஜித் தரப்பு | Patalanta Report Best Deal

இதனால் இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு கோருகின்றோம்.

அத்துடன் நீங்கள் பட்டலந்த தொடர்பில் தேடும் போது நாடு பூராகவும் பிரேம கீர்த்தி, ஸ்டேன்லி விஜேசுந்தர, விஜேகுமாரதுங்க, கொட்டிகாவத்த சத்தாதிஸ்ஸ தேரர் கொல்லப்பட்டமை, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள், இராணுவத்தினர், அவர்களின் குடும்பத்தினர் ஆகியோர் கொல்லப்பட்டமை தொடர்பிலும் தேட வேண்டும்.

பட்டலந்த வதைக்காரருக்கு தண்டனை கொடுக்கும் நடவடிக்கையுடன் இவை தொடர்பிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.