மனித உரிமை மீறலில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் கைது செய்யப்பட்ட பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி சிறையிலடைக்கப்பட்டுள்ளார் .
போதைப்பொருள் குழுவினருக்கு எதிராக நடவடிக்கை எடுத்தபோது நீதிமன்ற விசாரணைக்குட்படுத்தாமல் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொலை செய்ததாக பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி டுடெர்டே மீது குற்றம்சாட்டப்பட்டது.
குற்றவியல் நீதிமன்றம்
இது தொடர்பாக ஐ.நா சபையின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணை நடத்தியது. இதையடுத்து அவருக்கு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து நேற்று முன்தினம் (11.03.2025) , ரோட்ரிகோ டுடெர்டே, நெதர்லாந்து சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இண்டர்போல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
ஐ.நா. சபையின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்ட டுடெர்டே, நெதர்லாந்து சிறையில் அடைக்கப்பட்டார்.
மனித உரிமை மீறல் வழக்கில் , டுடெர்டே மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால், அவருக்கு ஆயுள் தண்டனை வரை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. இ
தற்கிடையே, டுடெர்டே ஆதரவாளர்கள், பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.