வடக்கிற்கு வரும் பிரதமரும் அமைச்சர்களும் நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைபடுத்தவில்லை என வட மாகாணத்தின் கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.
புத்தாண்டை முன்னிட்டு நேற்று (14.04.2025) ஊடகங்களுக்கு கருத்து வழங்கிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர், “கடந்த அரசாங்கங்களிலும் சரி, இந்த அரசாங்கத்திலும் சரி வடக்கிற்கு ஒரு நீதி தெற்கிற்கு ஒரு நீதி என செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
முந்தைய அரசாங்கங்களில் வடக்கு மாகாணங்களுக்கு மறுக்கப்பட்ட நீதி தற்போதைய அரசாங்கத்தாலும் ஐந்து மாதங்கள் கடந்தும் மறுக்கப்படுகின்றது” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,

