அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரஷ்யாவிற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைனுடன் போர் நிறுத்தத்திற்கு உடன்படவில்லை என்றால் ரஷ்யா கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது எச்சரிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
நாளை புடினை சந்திக்க உள்ள நிலையில் வெளியான எச்சரிக்கை
போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நாளை (14) ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்திக்க உள்ள சூழலில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


