பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படாது என்று ஸ்ரீலங்கா
பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் சஞ்சீவ எதிரிமான்ன ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டுள்ளார்.
வெளியக அழுத்தம்..
இதன்போது அவர் மேலும் கூறுகையில், “பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்தும் முடிவுக்கு அநுர அரசாங்கம் செல்லாது.

வெளியக அழுத்தம் காரணமாகவே பிரதமர் பதவிக்கு ஹரிணி அமரசூரிய நியமிக்கப்பட்டார்.
சில
விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் மாற்றம் நிகழாது. ஏனெனில் வெளியக
அழுத்தத்தின் பிரகாரம் வழங்கப்பட்ட நியமனம் அது” என சுட்டிக்காட்டியுள்ளார்.

