திருகோணமலை – பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவில் உள்ள முத்து நகர்
பகுதியில் துறைமுக அதிகார சபையினர் உள் நுழைந்தததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் இன்று (22) காலை மக்கள் காணிகளை கையகப்படுத்த முனைவது
தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ளதாக தெரியவருகிறது.
இந்நிலையில் குறித்த பகுதியில் காவல்துறையினர் விசேட
அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

