முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்திய அநுர ஆட்சி: இராதாகிருஷ்ணன் விமர்சனம்

தற்போதைய அரசாங்கத்தின் மீது மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டிருப்பதை எல்பிட்டிய
தேர்தல் முடிவுகள் வெளிகாட்டுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும்,

பொதுவாக இலங்கை அரசியலில் ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து அதில் வெற்றிப்பெறும்
ஜனாதிபதி மற்றும் அவருடைய கட்சி அடுத்து வருகின்ற அனைத்து தேர்தல்களிலும்
பாரியளவில் வெற்றிப்பெறுவதை நாம் கடந்த காலங்களில் பார்த்திருக்கின்றோம்.

அரசாங்கத்தின் மீது அதிருப்தி

ஆனால், ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து ஒரு மாதத்தின் பின்பு நடைபெற்ற
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் 50 வீதத்திற்கு அதிகமான வாக்குகளை பெற முடியாமல்
இருக்கின்ற ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது.

அதற்கு காரணம் இந்த ஜனாதிபதியின் மீதும், அரசாங்கத்தின் மீதும் அதிருப்தி
ஏற்பட்டிருப்பது காட்டுகின்றது.

மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்திய அநுர ஆட்சி: இராதாகிருஷ்ணன் விமர்சனம் | Radhakrishnan Criticize Anura Government

ஜனாதிபதி எதிர்கட்சியில் இருந்த போது தான் பதவிக்கு வந்தால் 48
மணித்தியாலயங்களில் பல மாற்றங்கள் செய்வதாக கூறினார்.

பல அதிசயங்கள் செய்யக்கூடிய திறமை என்னிடமும் தனது குழுவினரிடமும் இருப்பதாக
கூறினார்.

ஆனால் இப்பொழுது நான் மந்திரவாதியோ, தந்திரவாதியோ இல்லை என கூறினார்.

இது
தான் உண்மையான நிலைமை. பதவிக்கு வருவதற்கு முன்பும் எதிர்கட்சியில் இருந்துக்
கொண்டும் எதை வேண்டுமானாலும் பேசலாம்.

நாடாளுமன்ற தேர்தல்

ஆனால் நாட்காலியில் அமர்ந்தவுடன் தான்
கூறியதை நடைமுறைப்படுத்துவதில் எவ்வளவு சிக்கல்கள் இருக்கின்றது என்பதை
அப்பொழுது தான் புரிந்துக் கொள்ள முடியும்.

மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்திய அநுர ஆட்சி: இராதாகிருஷ்ணன் விமர்சனம் | Radhakrishnan Criticize Anura Government

எனவே, நிதானமாக சிந்தித்து செய்யக்கூடிய விடயங்களை மாத்திரம் மக்களிடம் கூற
வேண்டும்.

அதனையே ஐக்கிய மக்கள் சக்தி தலைவரும், ஏனைய அங்கத்தவர்களும் செய்கின்றார்கள்.

இதனடிப்படையில், நாங்கள் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வெற்றிகளை கொண்டு புதிய அரசாங்கத்தை அமைக்க கூடிய
சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.