சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவை வாயை மூடச் சொன்னதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோகிணி கவிரத்ன இன்று மன்னிப்பு கோரியுள்ளார்.
சபாநாயகர் அந்த நேரத்தில் நடந்து கொண்ட விதம் காரணமாக தான் ஆக்ரோஷமான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, தனது ஒழுக்கம் எங்கே என்று சபாநாயகர் கேள்வி எழுப்பியதாகவும், இந்த மன்னிப்பே அந்தக் கேள்விக்கான பதில் எனவும் கவிரத்ன தெரிவித்துள்ளார்.
பிமல் மீதான குற்றச்சாட்டு
இதேவேளை, சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க தனது சிறப்புரிமைகளை மீறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோகிணி கவிரத்ன குற்றஞ்சாட்டியுள்ளார்.
“நான் ஒரு கொலைகாரனின் மகள் என்று சபைத் தலைவர் கூறினார். என் தந்தை யாரையும் கொல்லவில்லை, ஆனால் மாத்தளை மாவட்ட மக்களுக்கு வாழ்க்கை கொடுத்தார்“ என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், 1989 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் போது பல சித்திரவதை மையங்கள் இருந்ததை அவர் சபையில் ஏற்றுக் கொண்டுள்ளார்.