முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இளைய மகன் ரோகித ராஜபக்ச கடந்த 2012ஆம் ஆண்டில் விண்ணுக்கு செய்மதியொன்றை ஏவியிருந்தார்.
சுப்ரீம் செட் செய்மதி-1 என்று பெயரிடப்பட்ட குறித்த செய்மதிக்கு இலங்கை அரசாங்கம் தரப்பிலிருந்து பாரியளவு பணம் செலவிடப்பட்டதாக கடந்த காலங்களில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்தநிலையில் ரோகித ராஜபக்சவினால் எமது வான்பரப்பில் விடப்பட்ட சுப்ரீம் செட் செய்மதி இலங்கை அரசாங்கம் முதலீடு செய்யவில்லை என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இந்த கருத்தை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
ஆனால், குறித்த நிறுவனத்தினால் இலங்கைக்கு வருவாய் கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக விளக்குகின்றது இப்படிக்கு அரசியல் நிகழ்ச்சி..